விரைவில் கூகுள் தேடுபொறியில் ஏஐ ஓவர்வியூஸ் அம்சத்தை வெளியிடுவதாக சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் தேடு பொறியில் செயற்கை நுண்ணறிவு அம்சம் புகுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் வரும் வாரத்தில் இருந்து அமெரிக்க பயனர்களுக்கு வெளியாவதாக சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். விரைவில் பல்வேறு உலக நாடுகளில் உள்ள பயனர்களுக்கும் இந்த வசதி விரிவாக்கம் செய்யப்படும் என கூறியுள்ளார். கூகுள் தேடல் முடிவுகளின் மேல் பகுதியில் ஏஐ ஓவர்வியூஸ் என்ற பகுதி இடம்பெறும். அதில், பயனர் கேட்ட கேள்வி […]
பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு நட்சத்திரங்களும் கோள்களும் ஆச்சரியம் நிறைந்தவை. அந்த வகையில், வியாழன் கோளை போல 50 மடங்கு பெரிதான கிரகம் ஒன்று, பஞ்சுமிட்டாய் போல லேசாக உள்ளது விஞ்ஞானிகளை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. Wasp 193b என்று பெயரிடப்பட்டுள்ள கிரகம் ஒன்று விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட கிரகங்களிலேயே அடர்த்தி குறைந்த 2வது கிரகமாக இது அறியப்படுகிறது. இதன் அடர்த்தி அளவு ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 0.059 கிராம் ஆகும். அதாவது, வியாழன் […]
சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோள் பூமியின் அளவில் உள்ளது. மேலும், வியாழன் கோள் அளவுடைய நட்சத்திரத்தை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புறக்கோளுக்கு Speculoos 3b என்று பெயரிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 55 ஒளி ஆண்டுகள் தொலைவில் இது அமைந்துள்ளது. ஒவ்வொரு 17 மணி நேரத்துக்கும் சிறிய நட்சத்திரம் ஒன்றை இந்த கோள் சுற்றி வருகிறது. இந்தக் கோள் சுற்றி வரும் நட்சத்திரமானது சூரியனை விட 2 மடங்கு குளுமையாகவும், […]
பூமியின் வட துருவ புள்ளி வேகமாக நகர்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியின் காந்தப்புலம் அண்ட வெளியிலிருந்து உந்தப்பட்டு மாற்றமடைகிறது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் துருவப் புள்ளி நகர்கிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், படிப்படியாக துருவ புள்ளி நகர்ந்து வந்து, வடக்கு மற்றும் தெற்கு துருவ புள்ளிகள் இடம் மாறுகின்றன. கடந்த காலங்களில், பல்வேறு கால அளவுகளில் இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது. சராசரியாக, 3 லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை துருவப் புள்ளிகள் இடம் மாறுகின்றன. […]
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் சாதனத்தில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் புகுத்தப்படுகின்றன. அதன்படி, ஒருவரின் பார்வையின் வழியாகவே ஐபோனை இயக்க முடியும். கண் கருவிழி நகர்வதை கணக்கிட்டு, பயனரின் விருப்பத்திற்கு ஏற்ப, செயலியை திறப்பது,பொத்தானை அழுத்துவது உள்ளிட்ட செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அம்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மட்டுமின்றி ஐ பேட் சாதனத்தையும் பார்வையாலேயே கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் கொண்டுவரப்படுகிறது. ஐ போனில் உள்ள முன்பக்க கேமரா இதன் முக்கிய கருவியாக […]
நாசாவில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு தலைமை அதிகாரி பதவியில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். விண்வெளித் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனித குலத்திற்கு நன்மை பயக்கும் திட்டங்களை தீட்டுவது அவசியமாகிறது. இந்த சூழலை கருத்தில் கொண்டு, நாசாவில் இந்த புதிய பொறுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் டேவிட் சல்வாங்கினி நாசாவின் செயற்கை நுண்ணறிவு தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே அவர் வகித்து வந்த தலைமை தகவல் அதிகாரி பொறுப்பையும் தொடர்ந்து மேற்கொள்ள உள்ளார். தொழில்நுட்பத்துறையில் […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.