ரஷ்யாவின் காஸ்பியன் கடற்கரையில் 2,500 சீல்கள் இறந்து கிடந்தது

December 5, 2022

தெற்கு ரஷ்யாவின் காஸ்பியன் கடற்கரையில் 2,500 சீல்கள் உயிரிழந்து கரை ஒதுங்கின. தெற்கு ரஷ்யாவின் காஸ்பியன் கடற்கரையில் கிட்டத்தட்ட 2,500 சீல்கள் உயிரிழந்து கரை ஒதுங்கின. இத்தனை சீல்கள் உயிரிழக்க காரணம் தெரியவில்லை எனவும், ஒருவேளை அவை இயற்கையாக இறந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முதலில் 700 சீல்கள் இறந்திருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் நடத்தப்பட்ட விரிவான ஆய்வில் இந்த எண்ணிக்கை 2,500 ஆக அதிகரித்தது. காஸ்பியன் சுற்றுச்சூழல் மைய தலைவர் ஜார் காபிசோவ் கூறுகையில், இவை […]

தெற்கு ரஷ்யாவின் காஸ்பியன் கடற்கரையில் 2,500 சீல்கள் உயிரிழந்து கரை ஒதுங்கின.

தெற்கு ரஷ்யாவின் காஸ்பியன் கடற்கரையில் கிட்டத்தட்ட 2,500 சீல்கள் உயிரிழந்து கரை ஒதுங்கின. இத்தனை சீல்கள் உயிரிழக்க காரணம் தெரியவில்லை எனவும், ஒருவேளை அவை இயற்கையாக இறந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முதலில் 700 சீல்கள் இறந்திருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் நடத்தப்பட்ட விரிவான ஆய்வில் இந்த எண்ணிக்கை 2,500 ஆக அதிகரித்தது.

காஸ்பியன் சுற்றுச்சூழல் மைய தலைவர் ஜார் காபிசோவ் கூறுகையில், இவை ஒரு வாரத்திற்கு முன் இறந்திருக்கலாம். அவை வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்தார். ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் சீல்கள் இறந்திருக்கும் சம்பவம் ஏற்கெனவே பல முறை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காஸ்பியன் கடல் பகுதியில் சுமார் 3 லட்சம் சீல்கள் வரை இருக்கின்றன எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu